Thursday 25 June 2015

என்னடா வழக்கு.

என்னடா வழக்கு?

என்னடா வழக்கு ஏனிந்த பொழப்பு?
உன்னோட கணக்கு ஊருக்குள் மணக்கு--ஒரு
பெண்ணோட எதிர்ப்பு பேடியே உனக்கு
மண்ணோட புதையும் மாபாவம் இருக்கு.

சண்டாளர் நெனப்பு மண்ணாளும் துடிப்பு
பெண்ணாளை அழிக்க என்னென்ன முடிப்பு?--நேரே
முன்னின்னு ஜெயிக்க முடியாத நடிப்பு
இன்னென்ன முறுக்கு படியாத படிப்பு?

வழக்கென்ன வழக்கடா வரட்டுண்டா பாக்கலாம்.
இழப்பென்ன எமக்கடா இடமுண்டா கேக்கலாம்--நெஞ்சில்
அழுக்கென்ன உனக்கடா வெளுக்கும்வரை போக்கலாம்
இழுக்கென்ன புரியுமடா இனிஉன்னை தூக்கலாம்.

பெண்ணாளப் பொறுக்காத சண்டாளக் கூட்டமே
எந்நாளும் நிலைக்காது உம்மோட ஆட்டமே---தமிழ்
மண்ணாளப் பிறந்தஎம் அம்மாதாம் ஆட்சியே
கண்ணாற மனமாற காண்பதும்உம் மாட்சியே.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment