மனிதம் அற்ற அரசியல்.
தமிழ் நாட்டு அரசியல்தான்.
தரம் கெட்ட விரசியல்தான்.--காரி
உமிழ்கிறது உலகம்தான்.
பழி போடும் அரசியல்தான்.
பகல் வேடம் இழிசெயல்தான்--கீறி
பலிவாங்கி சிரிக்கிறது.
பொய் பேசும் அரசியல்தான்
மெய் கூசும் அணிபெயல்தான்--மாறி
தொய்கிறது மனநிலைதான்.
சுயம் வாழும் அரசியல்தான்.
பொது வாழ்வு அரிதாரம்தான்.--நீரி
மயங்குவது உழைப்பவர்தான்
கூலிக்காடும் அரசியல்தான்.
கொள்கை மாறும் புரட்டியல்தான்.--மீறி
வேலிதாண்டி மேய்கிறது.
மானம் கெட்ட அரசியல்தான்.
ஈனம் விட்ட விவச்சாரம்தான்--ஊறி
நாணம் பட்டு அலைகிறது.
மனிதம் அற்ற அரசியல்தான்.
புனிதம் செத்த அரக்கினம்தான்--கோரி
மனிதரத்தம் சுவைக்கிறது.
ஊழல் எனும் அரசியல்தான்
ஊதாரி ஒழுங்கீனம்தான்--தேறி
ஊழியாகி விளைகிறது.
பித்தலாட்டம் அரசியல்தான்
குத்தலாட்டம் புரிவதுதான்---கூறி
சத்தியம்தான் அழுகிறது.
கொ.பெ.பி.அய்யா.
தமிழ் நாட்டு அரசியல்தான்.
தரம் கெட்ட விரசியல்தான்.--காரி
உமிழ்கிறது உலகம்தான்.
பழி போடும் அரசியல்தான்.
பகல் வேடம் இழிசெயல்தான்--கீறி
பலிவாங்கி சிரிக்கிறது.
பொய் பேசும் அரசியல்தான்
மெய் கூசும் அணிபெயல்தான்--மாறி
தொய்கிறது மனநிலைதான்.
சுயம் வாழும் அரசியல்தான்.
பொது வாழ்வு அரிதாரம்தான்.--நீரி
மயங்குவது உழைப்பவர்தான்
கூலிக்காடும் அரசியல்தான்.
கொள்கை மாறும் புரட்டியல்தான்.--மீறி
வேலிதாண்டி மேய்கிறது.
மானம் கெட்ட அரசியல்தான்.
ஈனம் விட்ட விவச்சாரம்தான்--ஊறி
நாணம் பட்டு அலைகிறது.
மனிதம் அற்ற அரசியல்தான்.
புனிதம் செத்த அரக்கினம்தான்--கோரி
மனிதரத்தம் சுவைக்கிறது.
ஊழல் எனும் அரசியல்தான்
ஊதாரி ஒழுங்கீனம்தான்--தேறி
ஊழியாகி விளைகிறது.
பித்தலாட்டம் அரசியல்தான்
குத்தலாட்டம் புரிவதுதான்---கூறி
சத்தியம்தான் அழுகிறது.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment