Tuesday 23 June 2015

மனச்சாட்சி இல்லை.

மனிதம் அற்ற அரசியல்.

தமிழ் நாட்டு அரசியல்தான்.
தரம் கெட்ட விரசியல்தான்.--காரி
உமிழ்கிறது உலகம்தான்.

பழி போடும் அரசியல்தான்.
பகல் வேடம் இழிசெயல்தான்--கீறி
பலிவாங்கி சிரிக்கிறது.

பொய் பேசும் அரசியல்தான்
மெய் கூசும் அணிபெயல்தான்--மாறி
தொய்கிறது மனநிலைதான்.

சுயம் வாழும் அரசியல்தான்.
பொது வாழ்வு அரிதாரம்தான்.--நீரி
மயங்குவது உழைப்பவர்தான்

கூலிக்காடும் அரசியல்தான்.
கொள்கை மாறும் புரட்டியல்தான்.--மீறி
வேலிதாண்டி மேய்கிறது.

மானம் கெட்ட அரசியல்தான்.
ஈனம் விட்ட விவச்சாரம்தான்--ஊறி
நாணம் பட்டு அலைகிறது.

மனிதம் அற்ற அரசியல்தான்.
புனிதம் செத்த அரக்கினம்தான்--கோரி
மனிதரத்தம் சுவைக்கிறது.

ஊழல் எனும் அரசியல்தான்
ஊதாரி ஒழுங்கீனம்தான்--தேறி
ஊழியாகி விளைகிறது.

பித்தலாட்டம் அரசியல்தான்
குத்தலாட்டம் புரிவதுதான்---கூறி
சத்தியம்தான் அழுகிறது.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment