அம்மாவின் வாக்கு.
நூறாண்டு காலம் கழகம் ஆளும்
அம்மாவின் வாக்கு வேரூன்றி வாழும்.
புரட்சியில் உதித்த பொன்மனக் கழகம்,
நிரந்தரம் அண்ணா தி.மு கழகம்.(நூறா)
சத்தியத் தாயின் உத்தமப் புதல்வன்,
சத்தியப் பாதையின் புரட்சித் தலைவன்;
இரத்தத்தின் இரத்தம் தமிழர் இயக்கம்-அம்மா
புரட்சித் தலைவி புதுயுகம் தொடக்கம்.(நூறா)
தொண்டன் இங்கு தலைவ னாகிறான்.
எந்தன் என்பான் இடறி வீழ்கிறான்.
வாரிசு முறையாம் சர்வாதி காரம்--என்றும்
நேராத கழகமாம் சனநாயகம்.(நூறா)
எவரும் உழைத்தால் முதல்வர் ஆகலாம்.
எடப்பாடி உரைத்த சத்திய வாக்காம்.
வாணிவக் கழகம் போலிது அல்ல-தமிழ்
மானுடக் கழகம் நூறாண்டு வெல்லும்.(நூறா)
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment