Sunday 25 February 2018

அம்மா நீ சிலையானோயோ!

அம்மா நீ சிலை ஆனாயோ!

கலை மாது அம்மா நீ
சிலை யாக ஆனாயோ!
நிலை இல்லா புவி வாழ்வில்-நீ
நிலையாக ஆனாயோ!

நினை வாக அம்மா நீ
துணையாக ஆனாயோ!
நிழ லாக தமிழ் நெஞ்சில்-நீ
அலையாக ஆனாயோ!

இறை வியாய் அம்மா நீ
பிறவியு மானாயோ!
நிறை யாக தவ வாழ்வில்-நீ
மறையாக ஆனாயோ!

அமை தியாய் அம்மா நீ
தமிழ் வளம் செய்தாயோ!
புரட்சி யாய் தமிழ் நாட்டில்-நீ
வளர்ச்சியும் கண்டாயோ!

தலைவி யாய் அம்மா நீ
நிலவிடும் தேவியோ!
விழியாக பொது வாழ்வில்-நீ
வழியாக வாழ்வாயோ!

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment