Thursday 4 August 2016

வயக்காட்டு பொம்மைகள்.

வயக்காட்டு பொம்மைகள்.

குழுக்கள் ஏதும் எமக்குள் இல்லை.
பலமே எல்லாம் அம்மா தில்லே!
எதிர்க்கும் இலக்கில் எதிரிகள் எவரே!
சிலிர்க்கும் வியர்வை உதிரிகள் அவரே!

வயக்காட்டு பொம்மைகள் பயங்காட்டும் வேலை
பயக்காது அம்மா படைமுன் வீணே!
நரிஊளைக் கூச்சல் இழிகோழை வாய்ச்சொல்.
நெறியாளும் அம்மாமுன் தெறித்தோடும் ஈசல்.

பதினெட்டுக் கணக்கு எத்தனைநாள் உம்மோடு?
மதிகெட்ட பிணக்கும் விதிவழி உம்கேடு.
பண்பற்ற செயல்முறை பாழான பாடமும்
படிப்பதும் நடைமுறை பயிற்றும் காலமும்..

எதிர்க்கவும் பலமுண்டு என்றும்நீ நம்பினால்
சதிக்கென்ன கதியுண்டு சரித்திரம் புரட்டினால்.
பொய்யான சிரிப்பாலே மெய்யழிந்து போகாது.
செய்யாத தரிசாலே சீர்தரலாகாது.

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment