Wednesday, 19 August 2020

பொய் விளக்கும் சுதந்திரம்.

கட்சி மாறிகள்.

நிலம் தேடும் நாடோடிகள்,
விலையாகும் கொள்கை மாறிகள்.
குளம் தேடும் மீன்கொத்திகள்,
களம் ஆடும் அரசியல்வாதிகள்.

குச்சி தோறும் பட்சிகள்,
கட்சி தாவும் ஒற்றர்கள்.
அரசியல் மேடைப் பேச்சு,
விரசியல் மேலுப் பூச்சு.

வீசிய தடித்த சொற்கள்
பாசத்தின் உச்சம் என்பார்.
வேசியெனக் கூச மாட்டார்.
வசையும் வாழ்த்தும் என்பார்.

திக்கறியா திசை மாறிகள்.
மக்கள் பாவம் அப்பாவிகள்.
எக்கணம் எவர் எங்கோ!
வெக்கம் கெட்ட அரசியல்.

நேசம் எல்லாம் வேசமோ!
வேசி மொழி அரசியலோ!
பதிவான முழக்கம் எல்லாம்:
சுதந்திரம் விளக்கும் பொய்யோ!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 6 October 2018

காவிரித்தாய்.

காவிரித்தாய்.

தமிழகம் தலை நமிர்ந்தது.

தமிழக  அரசே-
நின்

தன்னிகரில்லா தன்மானம்

வென்றது.
இனி

காவிரித்தாய் கரை

நிறப்பி வருவாள்.

அரசிதழ் வெளியீடு

அபாரச் சாதனை.

காவிரி மேலாண்மை

தேவைக்குத் தீர்வு செய்யும்.-

பெரும்

முயற்சிகளே

திருவினையாச்சு.

நஞ்சை நனையட்டும்.

நாடு செழிக்கட்டும்.

தஞ்சை சேறானால்தான்

தமிழுக்குச் சோறுண்டு.

வேளாண்மை வாழட்டும்.

விலைவாசி குறையட்டும்.

தமிழகமே
இன்று நீ

தலை நிமிர்ந்தாய்.

அம்மா என்றால் சும்மாவா!

அசத்தி விட்டாயம்மா.

பின்னி விட்டாயம்மா.

பிறந்த நாள் பரிசாக.

வாழ்க நீ பல்லாண்டு.    

கொ.பெ.பி.அய்யா.     

Tuesday, 2 October 2018

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இளம் துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்/.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்
வளம் கொழித்து வாழ்வு மலரட்டும்.
நிலை உயர்ந்து நெஞ்சம் நிறையட்டும்
நலம் நிகழ்ந்து நாடு சிறக்கட்டும்.

உழவு பிழைத்து உரிமை நிலைக்கட்டும்
பழமை படித்து பசுமை தழைக்கட்டும்
நதிகள் இணைந்து நன்செய் விரியட்டும்.
விதிகள் திருந்தி வேளாண்மை திரும்பட்டும்.

இருளும் அகன்று பகலும் போன்றாகட்டும்.
மருளும் மடிந்து அருளும் தோன்றட்டும்.
வறுமை தகர்ந்து அருமை ஊன்றட்டும்.
பெருமை நுகர்ந்து சிறுமை மாண்டாகட்டும்

காந்தி சொன்னதும் கனவில் வென்றாகட்டும்.
காட்சியில் கண்டதும்  நினைவில் நின்றாகட்டும்.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியாகட்டும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் என்றாகட்டும்.

ஆட்சித் திறனதும் மாட்சிமை அரணாகட்டும்.
ஆளுமை உரம்கண்டு அற்றது பயமாகட்டும்..
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்பாகட்டும்.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் வரமாகட்டும்..

கொ.பெ.பி.அய்யா.

 

Wednesday, 30 May 2018

பாரதச்செல்வி.

தமிழினத் தலைவி!
தனிநிகர் இறைவி!
ஊரது தமிழாம்!
நேரது செயலாம்!
பாரதச் செல்வி!
பேரது அம்மா!

அம்மா என்றே
தம்புகழ் கொண்டே
இம்மா நிலமே
செம்மாந்த தரமே.
தாய்வழி ஆட்சி
தமிழகம் தொடரும்.

மக்களின் நம்பிக்கை
மண்ணாண்ட அம்பிகை
தக்கோலம் தமிழிடம்
எக்காலும் சத்தியம்.
அம்மாவே கூறும்
ந்ம்மாளே ஆளும்.

கொ.பெ.பி. அய்யா

Sunday, 13 May 2018

அம்மா படை!

அம்மா படை!

கிடுகிடுங்குது நடுநடுங்குது-பூமி
மொடுமொடுங்குது அதிர்ந்து.
மடை திறந்தது அலை தொடர்ந்தது-அம்மா
படை நெருங்குது நிறைந்து.

படபடங்குது தட தடங்குது-எதிரி
தொடை நடுங்குது பயந்து .
மனம் மகிழ்ந்தது பலம் உயர்ந்தது-அம்மா
களம் விரிந்தது நிமிர்ந்து.

கலகலக்குது விலுவிலுக்குது-துரோகம்
நிலைகுலையுது தலை தாழுது.
இரதமேறுது வலம்ஊறுது- அம்மா
விதமாகுது இயக்கம் நிலைத்து .

இடிஇடிக்குது மினுமினுக்குது-வானம்
புகழ் முழக்குது வியந்து.
கொடி ஏறுது தமிழ் வாழ்த்துது-அம்மா
விடி வெள்ளி பார்த்து.

கொ.பெ.பி. அய்யா.