எம்ஜியாரு போட்ட விதை
ரெட்ட ரெட்ட இலையாத்தான்,
மொத்தம் மொத்தம் கிளையாத்தான்,
துளுத் துருக்கு நாடு எங்கும்;
செழித் திருக்கு வீடு எங்கும்.
எம்ஜியாரு போட்ட விதை,
எங்கம்மா காத்த இதை,
மேய வந்த கறுப்பாடு;
மேல பாத்து ஏங்குதடா..
நாட்டு மக்கள் தோட்டமிது,
நட்டு வச்சார் எம்ஜியாராம்,
யாருக் கென்ன சொந்தமிது;
பேரு அண்ணா திமுகது.
குடும்பச் சொத்தாக் கொண்டாடி,
கொண்டு தின்னும் வாரிசல்ல;
எழுந் தலை இயக்கம் இது;
புரட்சித் தலைவர் அதிமுக.
மக்கள் மனம் நின்றவராம்,
மக்கள் இயக்கம் கண்டவராம்,
மகாத்துமா எம்ஜியாராம்;
மறு பிறப்புப் புரட்சியாராம்.
மனித சேவை தொண்டுக்கே,
புனித அதிமுக கண்டவராம்,
மாமனிதம் ஜெயலலிதாவின்;
மகான் அவர் எம்ஜியாராம்.
கொ.பெ.பிச்சையா.

No comments:
Post a Comment