இரட்டை இலையாம் என்றொரு
புரட்சி
ஏழையின் சமூக தேவையாம் எழுச்சி.
வறுமை விரட்டி அகற்றிய சாட்சி
வாழ்ந்த புரட்சித் தலைவரின் காட்சி.
தோன்றிய நாளே ஊன்றிய ஆட்சி,
ஆண்டவர் எம்ஜியார் ஆண்டிட்ட மாட்சி,
ஏழ்மை வறுமை
சொல்லிங்கு இல்லை.
ஆள்மை அவர் நிகர் யாரிங்கு சொல்ல!
மக்களுக்காக வாழ்ந்த வள்ளல்
தக்கவர் எம்ஜியார் ஆண்ட செம்மல்.
மக்களால் அம்மா மக்களுக்காக அம்மா.
எக்காலமும் யதார்த்தம் எடபபாடி தாமாம்.
காலம் வரைந்த கோலத்தின் தொடர்ச்சி,
ஆளுமை நிறைந்த அம்மாவின் வளர்ச்சி,
ஆளும் தலைமை காலத்தின் தேர்ச்சி,
நீளும் எளிமை எடப்பாடி ஆட்சி.
யாரும் முதன்மை நேரும் எழுச்சி,
தேரும் தன்மை வளரும் முயற்சி.
வாரிசு முறைமை பிறப்பின் தொடர்ச்சி,
பேரும் புகழும் திறமையின் வளர்ச்சி.
மன்னர்கள் காலம் முடிந்திட்ட கோலம்.
அண்ணா திமுக எழுந்திட்ட காலம்.
புரட்சியில் பூத்த எழுச்சியின் இயக்கம்.
நிரந்தரம் வாழும் தொண்டர்கள் இரத்தம்.
கழகத் தொண்டர்கள் இரத்தம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment