Sunday, 26 January 2025

யார் ராஜபச்சே?

என்ன இது அநியாயம்

என்ன இது அநியாயம்
உன்னிடமும் இல்லை நியாயம்.       
சொன்னதெல்லாம் நிசந்தானோ!-உனக்கு.
சொந்தந்தானோ ராஜபச்சே!

கண்ணீரில் கடல் பெருக்கி
கப்பல் விடும் சண்டாளன்
உன் முடிசூட்டு விழாவிற்கு-பாவி
உற்ற திருஷ்டி பூசணியவன்.

செந்நீரில் குளம் நிறப்பி
செழிக்கக் குளித்தவன்தான்
காட்டேரி அவனேதான்--மனித
காவுபூஜை முடித்தவன்தான்.

பூதம் வந்து முடி சூட்ட
பாவம் என்ன செய்தாயோ!
வேதம் கற்ற நீ கூட—பாவம்
விதிவசம்ஆனாயோ!  

புண்ணியர் வாழ்த்தினால்
புகழ் இன்னும் கூடுமன்றோ!
பாவியரை அழைத்தாயோ!-தமிழ்
பாவம் உன்னைச் சூழுமன்றோ!

தமிழன் என்றால் ஏளனமோ!
தமிழினம் வேண்டாமோ!
தமிழ் இல்லா இந்தியாவோ!-அய்யா
தமிழ் செய்த பாவம் என்ன?

உடன் பிறந்த இந்தியனை
திடங்கொண்டு கொன்றவனை
கடன் என்று அழைப்பாயோ!-எம்மை
ஜடம் என்றும் நினைத்தாயோ!

அவன் செய்த இலாபம் என்ன?
நாங்கள் செய்த பாவம் என்ன?
எம்முணர்வைக் கொல்வதற்கு—நீயும்
எத்தனை நாள் தவமிருந்தாய்?

பாவியர்கள் தொலைந்தாரென்று
பகல்கனவா கண்டிருந்தோம்.
ஆவியாய் உன்னுருவில் –மீண்டும்
அவர் வந்தும் பூந்தனரோ!

என்றுதான் விடியுமோ!
எங்கள் தமிழ் ஆளுமோ!
அன்றுதான் பாரதம் –தமிழ்
வென்றும் ஒரு அங்கமாமோ!

கொ.பெ.பி.அய்யா.



அறவழி அதிமுக கட்டுரை



தாரகமந்திரம்

தாரக மந்திரம் இரண்டு


தமிழகம் என்பது ஒன்றுதான்.
தாரக மந்திரம் இரண்டுதான்.
எம்ஜியார் அம்மா மந்திரம்தான்
என்றும் சுபமே நிரந்தரம்தான்..

தமிழே சொந்தம் என்றும் தான்
தமிழே வாழ்வெனக் கொண்டும் தான்.
தாமெனத் தமிழே மக்கள் தான்.
தம்முயிர் வாழ்ந்த மந்திரம் தான்.

வானும் மண்ணும் உள்ளதுதான்
வாழும் தமிழும் வாழ்வதுதான்.
காலம் தானும் சுழலும் தான்.
ஞாலமந்திரம் எம்ஜியா ரம்மாதான்.

தமிழகம் என்பது ஒன்றுதான்.
தாரக மந்திரம் இரண்டுதான்.
எம்ஜியார் அம்மா மந்திரம்தான்
என்றும் சுபமே நிரந்தரம்தான்

கொ.பெ.பி.அய்யா.



வெற்றிக் கனிகள்.

வெற்றிக்கனிகள்.

முப்பத்து ஏழு வெற்றிக் கனிகள்.
இப்போது ஆளும் இந்திய மணிகள்.
செப்பம் அம்மா சீர்வளர் பணிகள் 
எப்போது மேற்றும் நேர்மன அணிகள்.

இந்திய வரலாறு இன்றும் எழுதும்
முந்திய தமிழின் முன்னுரை முழுதும்.
பிந்திய நாளில் ஒன்றென அம்மா
சந்தியா மகளென சாதனை பதிக்கும்.

ஒற்றை அல்ல ஓராயிரம் கோடி
பற்றிய தமிழின தாயிடம் தேடி
வெற்றி வெற்றி எனவீரம் பாடி
சுற்றினோம் முப்பத்து ஏழும் சூடி.

தமிழினம் இன்று தரணியில் வென்று
தலைநேர் நிமிர்ந்து பரணியில் பகிர்ந்து  
உலகம் வியந்து உற்றுப் பார்க்க
திலகம் சூட்டிய அம்மா வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.


Saturday, 25 January 2025

அம்மா இரங்கற்பா.

அம்மாவிற்கு இரங்கற்பா

அம்மா அம்மா வா! வா!
அகிலம் இன்று அழுகிறதே!
தாயே தாயே எழுந்து வா!
தமிழே கதறி அழுகிறதே!.

அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!

ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!

புரட்சித் தலைவர் ஆன்மா நீ!
புரட்சித் தலைவி புகழே நீ!
உழைத்துக் களைத்து அவர்நிழலே!
அழைத்து அமரம் ஆனாயோ!

நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவியும் நீயென்றோம்.நிறைந்தும் தமிழகம் நீயாக பரந்தும் துணைசெய் தாயாக.

மறைந்தாய் என்பது பொய்யாக,

எழுந்தாய் என்பதே மெய்யாக

எழுந்து வா எம்தாயே!

கொ.பெ.பி.அய்யா.

தாயே தமிழே வாழ்க!





தாயே தமிழே வாழ்க!

அம்மா என்னும் சொல் உதிர்த்தால்
அன்பு என்னும்  நெல் சிதறும்.
அம்மா எண்ணி உள்  நினைத்தால்
எம்மா வஞ்சமும் தான்
பதறும்.

தாயே என்னும் தமிழ் பகிர்ந்தும்
தர்மம் தானே தலை வணங்கும்.
தாயே உள்ளம் உனை நினைந்தும்
தைரியம் உள்ளே வினை முனைக்கும்.

அன்னை சொல்லோ வாய் மலரும்.
முன்னை வெல்ல தான் புலரும்.
விண்ணைத் தொடவும் எண்ணித் துணியும்
மண்ணில் பகையும் முன்னே பணியும்.

மாதா உந்தன் மகிமை முன்னால்.
சாதா எல்லாம் சகலமும் தன்னால்.
வேதா இல்லம் ஆலயம்
நின்றும்
சோதனை வெல்லும் போதனை சொல்லும்.

பெற்றாள் மடியினில் பிள்ளை முகம்போல்
பெற்றார் மகிழ்வதும் உன்னடி நிழல்கீழ்.
நற்றமிழ் சிறப்பதும் கற்றது போலே
மற்றென்ன அறிவதும் உற்றதும் மேலே!


தாயே வாழும் தமிழே வாழ்க!
நீயே ஆளும் நிலையே வாழ்க!
நேரே நிசமே சீரே வாழ்க!
பாரே வசமே தீரே வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.

வெற்றிச்சங்கம்.

வெற்றிச்சங்கம்.

நாடு எங்கும் பச்சை இலைகள் 
வீடு எங்கும் இரட்டை இலைகள்
ஈடு உண்டோ எமக்கிங் கலைகள்
ஓடும் கூட்டம் தேடுது வளைகள்

நாற்பதும் நமக்கே நல்லுறவாகுது
தோற்பது மற்றவர்க்கு 
முள்ளுறவாகுது
சேமம் வாழுது அண்ணா திமுக 
நாமம் போடுது புண்ணாக்குகள்

வெற்றிச்சங்கம் சுற்றி முழங்குது.
கொட்டும் முரசுகள் கொட்டிக்கிழியுது.
பற்றிச்சூரியன் எட்டி ஓடுது.
இரட்டை இலை மட்டும் எங்கும் தோணுது


வெற்றிச்சங்கம் அம்மாவுக்கு 
விழாக்கோலம் அம்மாவுக்கு.
கெட்டித் தனித்த துணிச்சலுக்கு 
முத்திய பரிசிது தமிழளிப்பு

கொ.பெ.பி.அய்யா.

பாரதமே சொர்கம்.

பாரதமே சொர்க்கம்!!

முந்திய நாகரிகம் உயர்
மூத்த குடிமக்கள்.
விந்திய மலை முட்ட
வேண்டிய செல்வங்கள்.
இந்தியத் திரு நாட்டின்
இருப்பென்றெண்ணியே
வந்த பறவையெல்லாம்
வாரிச் சென்றதோ!

பொறுமைப் பூமி இது
பொக்கிசக் களஞ்சியமோ!
வறுமைப்பட்டுப் பின்
வாடி நின்றதோ!
பெருமை குலைந்து தன்
பிள்ளைப்பசி போக்க
திருமை நாடுகளை முன்
தேடியும் நின்றதோ!

அடிமை செய்தவன் தளை
அறுத்து ஏகினாலும்.
விடிவு வருமென இமை
விழிக்கும் வேளையில்
தடித்த மனத்தினர் தலை
தூக்கிச்சிரித்தனர்..
பிடித்து வளைத்து அடிமை
பிணையமாக்கினர்.

குடும்பம் குடும்பமாய்
கொத்தடிமைக் கோலம்.
கொஞ்சங் கொஞ்சமாய்
குறைந்திட்ட போதும்
பிஞ்சு இளசுகள் கஞ்சிக்காக
நஞ்சுக் கொடியோரின்
வஞ்சக ஏவலில் நைந்து
வாடுவதோ பாவம்.!.

ஒட்ட ஒரு இடமில்லாமல்
  ஓரம் தேடி உறங்குது.
கட்டில் தேடும் இளசுகளோ
 காடுகளிலில் மறையுது.
தொட்டில் ஆடுங் குழந்தைகளோ
 தொட்டி களில் கதறுது.
மொட்டில் வாடும் பிஞ்சுகளோ
 தட்டில் பிச்சை கேட்குது.

வயிற் றிற்கு சோறில்லாமல்
வழிப் பறிகள் செய்யுது.
பத்து மாதம் சுமந்துபெற்ற
பால கரை விற்குது
வேலை யேதும் இல்லாமல்
வீதிகளில் நிற்குது.
வறுமை செய்யும் கொடுமையில்
வழிதவறிச் செல்லுது.

இந்த நிலைமாற அரசு
ஏற்றும் திட்டமெல்லாம்
வந்திடும் வழிகளிலேயே
சந்துகளில் ஒளிகிறது..
எந்த நிலையிலும் இங்கே
எவருமே சரியில்லை.
சொந்தமாகுமோ அந்த
சுடு காடு எவருக்கும்?

என்னதான் செய்யலாம்
ஏதாவது சொல்லுங்கள்.
பாவம் இந்த ஏழைகள்
பசி தணிக்க உதவுங்கள்.
ஊழல் செய்யும் கோழைகளை
உணர வழி செய்யுங்கள்.
பாழ் படுத்தும் பாவியரை
நாள் கொடுத்து தூக்குங்கள்.

ஆள் எண்ணித் தேடுவீர்!
அடிமைத்தனம் நீக்குவீர்!
தனி நிலைப் பொருளாதாரம்
நனி நிலை தேக்குவீர்!
இல்லாரே இல்லாது
எல்லோரும் ஆக்குவீர்!
வல்லாண்மை கொண்டுமே
வளர்ந்த நிலை தூக்குவீர்!

புதிய விடியலை நோக்கி
புதுமைகள் தேடுவோம்.
நதிகள் கடல் மறக்க
நல்லணைகள் கட்டுவோம்,
பசுமை வண்ணமெங்கும்
பாரெங்கும் பரப்புவோம்.
பசியை மறந்தோமென
பாரதமே சொர்க்கமென்போம்.

அம்மா அய்யா வரங்களில் 
அனைத்திந்திய அதிகாரம் 
செம்மா நிலைப் பலமுடன்
செயல் முறைத் தன்திறம்
எல்லாம் கொண்டு தான்
ஏற்றிடும் போதுதான் 
வல்லரசாகிடும் 
வளம் கண்டு உயர்ந்திடும்.

கொ.பெ.பி.அய்யா.







Friday, 24 January 2025

அம்மா வாக்கு.

அம்மாவின் வாக்கு.

நூறாண்டுக் காலம் கழகம் ஆளும்
அம்மாவின் வாக்கு வேரூன்றி வாழும்.
புரட்சியில் உதித்த பொன்மனக் கழகம்,
நிரந்தரம் அண்ணா தி.மு கழகம்.(நூறா)

சத்தியத் தாயின் உத்தமப் புதல்வன்,
சத்தியப் பாதையின் புரட்சித் தலைவன்;
இரத்தத்தின் இரத்தம் தமிழர் இயக்கம்-அம்மா
புரட்சித் தலைவி புதுயுகம் விளக்கம்.(நூறா)

தொண்டன் இங்கு தலைவ னாகிறான்.
எந்தன் என்பான் இடறி வீழ்கிறான்.
வாரிசு முறையாம் சர்வாதி காரம்--என்றும்
நேராத கழகமாம்  சனநாயகம்.(நூறா)

எவரும் உழைத்தால் முதல்வர் ஆகலாம்.
எடப்பாடி உரைத்த சத்திய வாக்காம்.
வாணிவக் கழகம் போலிது அல்ல-தமிழ்
மானுடக் கழகம் நூறாண்டு வெல்லும்.(நூறா)

கொ.பெ.பி.அய்யா.

இராமஜெயராஜ்யம்.

ஜெய இராஜ்யம்

அய்யா எடப்பாடியார்
ஆள வேண்டும் தமிழகம்-இராமஜெய இராஜ்யம் சாத்யம்
ஆவதும்மால் சத்தியம்.

இராமச்சந்திரன் ஆண்ட நாடு—எம்ஜி
இராமச்சந்திரன் ஆண்ட நாடு
வேறு இராஜ்யம் இல்லை ஈடு
இரட்டை இலை சின்னமாம்.
பறக்கும் கொடி அன்னமாம்.

இராமன் கண்ட எம் தாயே—எம்ஜி
இராமன் கண்ட எம் தாயே!
சேமம் செய்வார்  நம்மையே!
மக்களால் மக்களுக்காக
 இராஜ மாதா மந்திரம்.

ஆறே போன்ற உம் கருணை-எம்ஜி
ஆரே போன்ற உம் கருணை
பாரே போற்றும் நம் பெருமை.
நூறாண்டுக்கு மேலும் ஆளும்-
இராம ஜெய இராஜ்யம் நீளும்.

கொ.பெ.பி.அய்யா.




மாதவரம் மூர்த்தி.

மா---தவ--வரம்

மா--தவ--வரம் மாதவரம்,
மூர்த்தி பேராங் கீர்த்தியாம்;
நேர்த்தியே அம்மாச் செல்லம்--வள்ளுவ
மாவட்டச் செயலர் வாழ்க!

முன்னாள் மாண்பு மூர்த்தியார்,

சென்னாப் புகழ் பூர்த்தியார்;

எடப்பாடியார் பற்றாளர் 

வாழ்த்துவோம்.

திருவள்ளூர் மாவட்டம்,
திருசொல்லு பேர்வட்டம்;
அண்ணா திமுக கோட்டம்--அம்மா ஒன்றே எங்கள் உயிரோட்டம்.
நன்றி  கொள்வோம் கடனாட்டம்.

கொ.பெ.பி .அய்யா.

தாய்ப் பால் கள்ளிருக்க.....!

கள்ளக்குறிச்சி பாவம்.

தாய்ப் பாலப்  போலக் கள்ளு தந்த பனையும் கதறுது ஐயய்யோ!
மாய்ந்து சாயும்  சேய்களுக்கு தாய்ப் பாலுந் தடையோ 
ஐயய்யோ!

கள்ளும் தானே ஓர் உணவு,
சொல்லுந் தமிழும் ஊர் மரபு.
பனைத் தொழில் செய்யும் விவசாயம்,
தனைத் தடையென்ன ஐயோ அநியாயம்!

ஆகாரம் கள்ளுக்கு தடை போட்டு,
சாவுக்கு  சாராயக் கடை போட்டு;
அரசே விற்கும் அதிகாரம்
புருசனை விலக்கும் சுவிகாரம்.

அவணி எங்கும் அவலக்குரல்
அறுந்து விழுந்திடும் தாலிக் குவியல்.
வித்தக் காசும் போதுந் தானோ!-
செத்தது எத்தனைக் கொடுமை ஐய்யோ!

கள்ளக் குறிச்சி கண்ணீராறோ!
எல்லை மீறி ஓடுது ஐய்யயோ!
நாடெங்கும் ஊரும் பேராச்சோ!
கேடோங்கும் ஏழை சாவாச்சோ!

போதைக் காக வியாபாரமோ!
சாவுக்கான  ஆதாரமோ!
வெந்த மனசும் ஆறல்லயே---- ஐய்யோ-
 வியாபாரம் இன்னும் தீரல்லயே!

விசத்த விற்பதும் வியாபாரமோ!
நிசத்தச் சொன்னால் கேவலமோ!ஹஹ்
பொண்டாட்டி புள்ளைக பாவம.
திண்டாடும் கொடுமை சாபம்.

எத்தனை இலட்சங்கள் கொடுத்தால் என்ன!
அத்தனை உச்சம் எட்டுமோ!
தகப்பனைத் தேடும் பிள்ளைக்கு:
தாயென்ன சொல்வாள் பதிலுக்கு?

கொ. பெ. பிச்சையா.






Thursday, 23 January 2025

இரட்டை இலை

இரட்டை இலை.

இரட்டை இலையாம் என்றொரு
புரட்சி 
ஏழையின் சமூக தேவையாம் எழுச்சி.
வறுமை விரட்டி அகற்றிய சாட்சி‌
வாழ்ந்த புரட்சித் தலைவரின் காட்சி.

தோன்றிய நாளே ஊன்றிய ஆட்சி,
ஆண்டவர் எம்ஜியார் ஆண்டிட்ட மாட்சி,
ஏழ்மை வறுமை
 சொல்லிங்கு இல்லை.
ஆள்மை அவர் நிகர் யாரிங்கு சொல்ல!

மக்களுக்காக வாழ்ந்த வள்ளல்
தக்கவர் எம்ஜியார் ஆண்ட செம்மல்.
மக்களால் அம்மா மக்களுக்காக அம்மா.
எக்காலமும் யதார்த்தம் எடபபாடி தாமாம்.

காலம் வரைந்த கோலத்தின் தொடர்ச்சி,
ஆளுமை நிறைந்த அம்மாவின் வளர்ச்சி,
ஆளும் தலைமை காலத்தின் தேர்ச்சி,
நீளும் எளிமை எடப்பாடி ஆட்சி.

யாரும் முதன்மை நேரும் எழுச்சி,
தேரும் தன்மை வளரும் முயற்சி.
வாரிசு முறைமை பிறப்பின் தொடர்ச்சி,
பேரும் புகழும் திறமையின் வளர்ச்சி.

மன்னர்கள் காலம் முடிந்திட்ட கோலம்.
அண்ணா திமுக எழுந்திட்ட காலம்.
புரட்சியில் பூத்த எழுச்சியின் இயக்கம்.
நிரந்தரம் வாழும் தொண்டர்கள் இரத்தம்.
கழகத் தொண்டர்கள் இரத்தம்.

கொ.பெ.பி.அய்யா.










Friday, 17 January 2025

நாளைய வெற்றி.

நாளை நமதே!

நாளைய வெற்றி நம்விரல் மைய்யில் 

ஏழையர் நாம்தமிழ் கைய்யில்,

விவசாய முதல்வர் அவசியம் அதற்கு,

தவசியம்மா புதல்வற்கே ஓட்டு.


ஆளுக்கு ஆளு பணவங்கிக் கணக்கு,
நாளுக்கு நாளு உயர்விங்கு இருக்கு.
எடப்பாடியாரே முதல்வராம் நமக்கு,
கடமை இருக்கு போடுவோம் ஓட்டு.


குறையென்ன சொல்ல எடப்பாடி ஆட்சி,
திரைப் பின்னே மெல்வார் புறமாகப் பேசி.
வேறோடு மீட்போம் சுபவாழ்வு ஆட்சி,
சீரோடு காப்போம் நாம் போட்டு ஓட்டு.


கொ.பெ.பி.அய்யா.


வள்ளல் எடப்பாடியார்.

வள்ளல் எடப்பாடியார்.

அள்ளிக் கொடுக்கும் வள்ளலார்,
உள்ளம் தங்கம் எம்ஜியார்.

உள்ள படியே விவசாயிதார்.

சொல்லும் புகழ் எடப்பாடியார்

ஏழைகளின் சுமை தாங்கி
வாழவைத்தார் கடன் நீங்கி.
தோழராய் வாழுங் குசேலர்
சோழராய் ஆளும் எடப்பாடியார்.

மகளிற்கு சோதரராய்
உகந்தசீர் ஆதரராய்
தேவையென்ன கேட்டறிவார்
சேவகராய் எடப்பாடியார்.

மழைக்கு அவர் சொந்தக்காரர்
செழிக்கும் வளம் சிந்தைக்காரர்.

செயயும் விவசாயம் செழிக்கச் செய்யும்.

பெய் யென்றாலே பெய்யும் மழை.

கொ.பெ.பி.அய்யா.

எம்ஜிஆர் போட்டவிதை

எம்ஜியாரு போட்ட விதை

ரெட்ட ரெட்ட இலையாத்தான்,
மொத்தம் மொத்தம் கிளையாத்தான்,
துளுத் துருக்கு நாடு எங்கும்;
செழித் திருக்கு வீடு எங்கும்.

எம்ஜியாரு போட்ட விதை,
எங்கம்மா காத்த இதை,
மேய வந்த கறுப்பாடு;
மேல பாத்து ஏங்குதடா..

நாட்டு மக்கள் தோட்டமிது,
நட்டு வச்சார் எம்ஜியாராம்,
யாருக் கென்ன சொந்தமிது;
பேரு அண்ணா திமுகது.

குடும்பச் சொத்தாக் கொண்டாடி,
கொண்டு தின்னும் வாரிசல்ல;
எழுந் தலை இயக்கம் இது;
 புரட்சித் தலைவர் அதிமுக.

மக்கள் மனம் நின்றவராம்,
மக்கள் இயக்கம் கண்டவராம்,
மகாத்துமா எம்ஜியாராம்;
மறு பிறப்புப் புரட்சியாராம்.

மனித சேவை தொண்டுக்கே,
புனித அதிமுக கண்டவராம்,
மாமனிதம் ஜெயலலிதாவின்;
மகான் அவர் எம்ஜியாராம்.

கொ.பெ.பிச்சையா.