Monday, 29 September 2025

வாழும் புரட்சியார்

வாழும் புரட்சியார்.

வாழும் தமிழ் புரட்சியார் --நாளை
ஆளும் தமிழ் எழுச்சியார்.
அதிரும் தமிழ் அதிர்ச்சியார்--எதிரி
பதறும் வலிமை முதிர்ச்சியார்.
சிதறும் புன்னகை மலர்ச்சியார்

ஓடும் நதிபோல ஓடும்--தமிழ்
நாடும் நலம்பெற யாவும்
கூடும் வளமுறத் தேடும்--கழக
நீடுயர் மலைபோல் மேவும்
எடப்பாடி பழனிசாமி யாகும்.

அம்மா வளர்த்த பிள்ளை --அவர்
அன்பில் நிறைந்த வெள்ளை.
இன்றும் அவர்தான் முதல்வர்.--கொங்கு
எடப்பாடி தந்த புதல்வர்.
எளிய விவசாயத் தொழிலர்.

கொங்கு மண்டலச் சிங்கம் --ஓளிர்
திங்கள் முகத்துத் தங்கம்.
எம்ஜிஆர் வழியில் செல்லும்- பொன்மன
அம்சத் தலைமை வெல்லும் 
அண்ணா திமுக சொல்லும்.

தமிழகம் ஆளும் கழகம்--அது
அண்ணா தி மு க கழகம்.
உண்மை அதுதான் நன்மை--உலகம்
ஓத்துக் கொள்ளும் திண்மை.
உத்தமம் அதுவே நன்மை

கவிஞர. கொ. பெ. பி. அய்ய்யா

கழகமுனா கழகந்தான்.

கழகமுன்னா கழகந்தான்.

கழகமுன்னா கழகந்தான்.
அண்ணா தி. மு கழகந்தான்.
அண்ணலவர் எம்ஜியார் 
அம்மா புரட்சித் தலைவியார்.
அவர்வழி புரட்சித் தமிழர்
அய்யன் எடப்பாடியார்.
தலைமைவழிப் பண்புகள்
தடம்தொடர்ந்து தொடர்கிறார்.

மாற்றுக் கட்சியானாலும்
மாற்றமிலாப் பண்புடன்
நேற்றின்று எண்ணாமல்
நெற்றிக்கண் திறக்கிறார்.
உற்றநன் குணமாளர்
பற்றிநெறி தொடர்கிறார்.
வற்றாத மரபினார்.
முற்றிலும் சத்தியனார்.

அரசியல் லாபம் பார்த்து 
விரசமான வாதம் கோர்த்து
உண்மைக்கு மாறாக
தன்மையை தானொளித்து
மாற்றிப் பேசத் தெரியாதார்.
ஆற்றுவழி மரபினார்.
அண்ணாதிமு கழகத்தார்
எந்நாளும் வழிதொடர்வார்.

கரூர் சம்பவத்தை
பொருள் மாறா நம்பகத்தை
தருமத்தின் நிலை நின்று
நிருபித்தார் சொல் இன்று.
அரசதன் பொறுப்பதனை
புருஷ இலட்சனம் கொண்டவர்
சரியாக உறுதி ஒன்றார்
தெரிவித்தார் நெறி கண்டார்.

வாரிசு வழி வந்தபாவியர்
வழிவிட மறுக்கிறார்.
நேர்வழி தெளியாமல்
ஊராள நினைக்கிறார்.
அதற்கான கோரமுகம்
அவர்கொண்டு அலைகிறார்.
வரலாறு நம்பாமல்
குறுக்கு வழி முயல்கிறார்.
அய்யோவென ஒருநாள்
மெய்யாவே போயொழிவார்.

கவிஞர். கொ. பெ. பி அய்யா.


Tuesday, 23 September 2025

கடல் போல் கூட்டங்கள்.

கடல் போல் கூட்டங்கள்.

கடல் போல் கூட்டங்கள் காணும் இடமெலாம்.
எடப்பாடி பயணங்கள் எதிரிகள் பயமெலாம்.
அவர் நாளை முதல்வ ரென்ற
அச்சாரம் காட்சி சொலும்.

வரலாறு மாறாது மறுமுறை தேறாது
திருப்பங்கள் மறுபக்கம் விருப்பங்கள்
நீராது.
விபத்தாக நேர்ந்ததை அபத்தமான ஆட்சியிதை,
சபதமிட்டு ஓட்டவே சாட்சி இந்தக் கூட்டமே.

அம்மாவின் பிள்ளைகள் சும்மாயில்லை காட்சிகள்.
நம்மாளு பழனிச்சாமி நம்பிவந்த தம்பி கள்.
தமிழகத்தின் விடிவெள்ளி தன்னுயிர் சொந்தங்கள்
தமிழரான விவசாயி தானாள வேண்டியவர்.

அரசாளத் தகுதியும் அரியணை அம்சமும்,
பொருந்திய ஒருவராம் வரம்பெற்ற முதல்வராம்,
அம்மாவின் ஆசிபெற்ற சிம்மாசனம் அமர்வராம்,
செம்மாந்த தமிழாட்சி சீர்மையச் செய்வராம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




Monday, 8 September 2025

புரட்சித் தமிழன் எழுச்சிப் பயணம்.

புரட்சித் தமிழன் எழுச்சிப் பயணம்.

புரட்சித் தமிழன் எழுச்சிப் பயணம்.
மருட்சி அரரசியல் விழிக்குந் தருணம்.
திரளும் மக்கள் அலைகடல் கூட்டம்.
மிரளும் எதிரிகள் நிலைகுலை ஓட்டம்.

பொய்யும் புரட்டும் பொய்த்தது காட்டும்.
பொய்மை அரசியல் ஓழித்தது சாற்றும்.
ஏய்த்த கூட்டம் எதிர்கொள்ளப்பதறும்.
சீறும் சீற்றத்தின் எழுச்சி முன் சிதறும்.

கூட்டமாய் கூடிக் காட்டும் உன்வீரம்.
வாட்டமாய் வாடி ஆகும்பின் சோரம்.
நேருக்கு நேர்நிற்க அச்சமேன் உமக்கு?
போருக்கு நேர்நிற்கும் படைஉண்டு எமக்கு.

வாயாலே வடை சுடும் மாயாஜால வேடம்.
பாயாது பலிக்காது கற்றோமடா பாடம்.
பேயாளும் காடாச்சோ ஓயாத கேடாச்சோ!
வாயாலே சொல்லியழ வார்த்தயினித் தேடலாச்சோ!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.