Tuesday, 8 April 2025

இளைய புரட்சித்தலைவர்

இளைய புரட்சித்தலைவர்.

இளைய புரட்சித் தலைவராமவர்.
எடப்பாடி தந்த எழுச்சியாராமவர்.
புதிய புரட்சிப் புயலாமவர்-தமிழக
விதியைப் புரட்டும் எடப்பாடி யார்.

பழத்தின் புரட்சி பழனிச்சாமி,
களத்தின் எழுச்சி நாயக சாமி ,
புண்முறுவல் பூக்கும்  புரட்சித் தலைவன்-புதுமைக்
கண்முன் காட்சி எடப்பாடியார்.

அம்மா கண்ட உதய மணியாம்
நம்மக் கழகம் இதயக் கனியாம்.
சும்மா இல்லை மனிதர் அவர்-எதிரி
சுளுக்கை எடுக்கும் எடப்
பாடி யார்.

சிரிப்பே அவர் மெய் போராயுதம்,
குறிப்பில் எதிர்விடும் சூலாயுதம்,
எதிர் வினையாளன் தானே பணிவான்-பலம்
பாதியைப் பறிப்பார் எடப்பாடியார்.

விவசாயி சேனை தானைத் தலைவன்.
அவசியம் எதுவென அறிந்த உழவன்.
அவதார புருசன் தமிழ் மண் புதல்வன்-நிரந்தரம்
அவரே முதல்வன் எடப்
பாடியார்.

கொ.பெ.பிச்சையா.

ஸ்ரீரங்கத்தாயே.

ஸ்ரீரங்கத் தாயே!

கோமள வள்ளி குழந்தைகள் செல்வி.
பாமரர் வாழ்வில் பழகிடும் கல்வி.
சேமத்தின் பொருளே ஸ்ரீரங்கத் தாயே!
கோபுரப் புகழே கொடைவள்ளல் வாழ்க!

அன்னை தெரேசா அவள் திருவடிவம்
அம்மா மனசே அவளருள் படிவம்.
அனாதை என்றே எவரிங்கு இருப்பார்
அரசின் தொட்டில் உறவங்கு சிறப்பார்.
அன்னை தெரேசா அவள் திருவடிவம்
அம்மா மனசே அவளருள் படிவம்.

பசியென்ற சொல்லே பழக்கத்தில் இல்லை.
விதியென்ற தொல்லை வறுமையும் இல்லை.
தொடர்ந்தும் அம்மா ஆட்சியும் தொடர்ந்தால்
படர்ந்தும் திட்டம் போட்டதும் நிறைந்தால்
பசியென்ற சொல்லே பழக்கத்தில் இல்லை.
விதியென்ற தொல்லை வறுமையும் இல்லை.

மாறி மாறி ஆண்டு மாறியாய்.
ஆட்சி மாற்றம் ஆட்டம் முடிந்தது.
தேறும் தூரம் தூர்ந்தும் தீர்ந்தும்
வீழ்ச்சி நேரவும் வீழ்ந்தும் தேர்ந்தது.!
மாறி மாறி ஆண்டு மாறியாய்.
ஆட்சி மாற்றம் ஆட்டம் முடிந்தது.

கட்டும் தமிழகம் கட்டி நிறையுங்கள்`
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுங்கள்.
அம்மா கரங்களில் நம்பிக் கொடுங்கள்.
நம்மா நிலம்பார் செம்மா நிலாமாம்    
கட்டும் தமிழகம் கட்டி நிறையுங்கள்`
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுங்கள்

கொ.பி.அய்யா.


பிழைப்புக்காக அல்ல.

பிழைப்புக்காக அல்ல!

பிழைப்பதற் கல்லடாஅதிமுக,

பிறப்பி லிருந்து நான் அதிமுக;

புரட்சித் தலைவர் புரட்சித் தலைவியர்,

திருவென அதிமுக என் உயிரடா!

வாழும் பூமி எனக்கிதுதான்.
அலையும் தேவை எதற்கடா?
பழகிய சொந்தம் துறப்பாரோ!
விலகியும் நெஞ்சம் பறப்பாரோ!

உண்ட வீட்டிற்கு இரண்டகமா!
கண்ட வாழ்விற்கு வஞ்சகமா!
நன்றி மறந்தார் நஞ்சகமா!
கொண்டு அலைவார் பாவமடா!

குறைந்தாலும் நிறைந்தாலும்
நிறைந்த குளமென் மனமடா!
பிறப்பு என்பது ஒருமுறைதான்:
சிறப்பு எனக்கது அதிமுகதான்.

கடைநிலைத் தொண்டு ஊழியனும்,
முதல்வர் ஆகும் சனநாயகம்.
அலையும் எண்ணம் விலைபோகும்:
நிலையெங்கு செல்லும் அய்யோடா!

வாழும் வரையும் தொண்டன்டா!
சாகும் நிறைவும் நிற்பேன்டா!
ஆளும் அதிமுக ஆட்சிதான்:
காலம் வெல்லும் நீட்சி தான்.

கொ.பெ.பி.அய்யா.