Monday, 21 September 2015

ஆளும் அம்மா மீனாட்சி.

தமிழகம் ஆளும் மீனாட்சி.

தமிழகம் ஆளும் மீனாட்சி
தரணியில் தனிப்புகழ் அரசாட்சி.
அம்மா என்றே பேராச்சி.
அகிலம் அறிந்த நிலையாட்சி.

தமிழகம் துலங்கும் திருவரங்கம்
தந்த தாய்தான் ஆண்டாளாம்.
தமிழே பிறப்பின் அடையாளம்.
தன்னுயிர் வாழ்வதும் தமிழுக்காம்

தமிழர் தம்மக்கள் தானாளும்
தன்னலம் போற்றா தாயாளும்
உலகத் தமிழர் உளம் வாழும்
ஒன்றே உண்டே தமிழ் நாடாம்.

நெஞ்சுக்கு நீதி கொண்டாளும்
அஞ்சா நெஞ்சம் அம்மாவாம்.
இணையே எவரும் இல்லைதான்.
இதய தெய்வம் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment